கதர் கிராம வாரியத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மண்டல அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கதர் வாரிய அலுவலகத்தில் பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற ஆன்லைன் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். 35 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் என்றார்.
தலைமைச் செயலர் அலுவலர் கணேசன் வரவேற்றார். லட்சுமிநாராயணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் வாரிய துணை இயக்குநர் அமுதகுமார், வங்கி மேலாளர்கள், வாரிய அதிகாரிகள், பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் திரளாகக் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் சேக்கிழார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.