2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:53 am

தினமணி

குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவை குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன.
 இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், அங்குள்ள குடியிருப்புகளுக்கு தனி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மூத்த நிர்வாகி ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். பொருளாளர் ஞானவேல், துணை செயலாளர்கள் அஞ்சலிதேவி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
 மாநிலச் செயலாளர் விஸ்வநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம், தொகுதிச் செயலாளர் தேவசகாயம், மாநிலக் குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் வீராங்கன், நலவேந்தன், முரளி, சித்ரா, அய்யனார், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.