11-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 11-ஆம் தேதி,  புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது என
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 11-ஆம் தேதி,  புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது என புதுச்சேரி அரசு சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் சமூக நலத்துறை இந்த ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.  போட்டிகள் வரும் நவ.11-ஆம் தேதி (சனிக்கிழமை) புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகளின் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.  போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில்  கலந்து கொள்ள ஏதுவாக, புதுவை அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வரும் 11-ஆம் தேதி காலை 8 மணியளவில் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கிற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com