அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காலிமனைகளை தூய்மையாக பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை: கிரண் பேடி

காலிமனைகளை தூய்மையாகப் பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:16 am

DIN

காலிமனைகளை தூய்மையாகப் பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
புதுவையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறைகள் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே,  காலி மனைகளில் நீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே, காலி மனைகளில் நீர் தேங்காமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி கிருஷ்ணா நகர், எழில் நகர் பகுதிகளில் காலி மனைகளில் நீர் தேங்குவது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், நகராட்சி ஆணையர் ரமேஷ், எஸ்.பி. வெங்கடசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:
பல்வேறு காலிமனைகளை அதன் உரிமையாளர்கள் கவனிக்காத நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலுக்குப் பிறகும், மனை உரிமையாளர்கள் எந்த துப்புரவு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனைகளில் குப்பைகள், கழிவுகள், கழிவுநீர் அடைப்பு, நீர் தேக்கம் போன்றவை உள்ளன.
விஷ ஜந்துக்கள் பூச்சிகள் நடமாட்டத்துக்கு ஏதுவாக உள்ளன. இதனால் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தொல்லைக்கு ஆளாகின்றனர். மேலும் பருவமழையும் நிலையை சிக்கலாக்கி விடுகிறது. எனவே வருவாய், நகராட்சி, காவல் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 133-ன் கீழ் காலி மனைகளை தூய்மையாக பராமரிக்காதவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.
அப்படியும் நடவடிக்கை இல்லை என்றால் 188 பிரிவின் கீழ் விதிமீறல் வழக்கு பதியலாம். போலீஸார் தானாகவே வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.