புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் நுழைவுத் தேர்வு கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள புஸ்தக் மந்தீர் புத்தக விற்பனையகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 முடித்த பிறகு மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர நீட், ஐஐடி, ஜிப்மர், நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் இத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டது.
தொடக்க விழாவுக்கு வாசகர் வட்ட செயலர் பேராசிரியர் சம்பத்குமார் தலைமை வகித்தார். கண்காட்சியை கொரவள்ளிமேடு தியாகி சுப்பிரமணிய படையாச்சி அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் தமிழ்வாணன், விவேகானந்தா பயிற்சி மைய நிறுவனர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர்.
கண்காட்சியில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட், ஜிப்மர், எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு பயிற்சி புத்தகம், வினா}விடை புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் ஜெகதீசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


