வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நுழைவுத் தேர்வு புத்தகக் கண்காட்சி

புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் நுழைவுத் தேர்வு கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள புஸ்தக் மந்தீர் புத்தக விற்பனையகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:33 am IST

புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் நுழைவுத் தேர்வு கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள புஸ்தக் மந்தீர் புத்தக விற்பனையகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 முடித்த பிறகு மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர நீட், ஐஐடி, ஜிப்மர், நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் இத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டது.
தொடக்க விழாவுக்கு வாசகர் வட்ட செயலர் பேராசிரியர் சம்பத்குமார் தலைமை வகித்தார். கண்காட்சியை கொரவள்ளிமேடு தியாகி சுப்பிரமணிய படையாச்சி அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் தமிழ்வாணன், விவேகானந்தா பயிற்சி மைய நிறுவனர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர். 
கண்காட்சியில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட், ஜிப்மர், எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு பயிற்சி புத்தகம், வினா}விடை புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் ஜெகதீசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.