மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

புதுவை முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள்

புதுவை விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் முதல்வருமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

Updated On :7 ஜூன் 2018, 8:44 am IST

புதுவை விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் முதல்வருமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
 இதையொட்டி, புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் மறைமலையடிகள் சாலை- கடலூர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அவரது மகனும், பேரவைத் தலைவருமான வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மேலும், முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி.ஆறுமுகம், ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் செயலாளர் சாம்ராஜ், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
 முன்னதாக, வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் பிரதேச கமிட்டி தலைமை அலுவலகத்தில் வெங்கடசுப்பா ரெட்டியார் உருவப்படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் எம்டிஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.