வீதியில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு உணவூட்டிய காவலரின் செயலை அறிந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவரைப் பாராட்டினார்.
புதுவை மாநிலம், ஏனாம் காவல் நிலையத்தில் ரோந்துக் காவலராகப் பணியாற்றி வருபவர் கடலி மதுசூதன ராவ். இவர், ஏனாம் குடியிருப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்த போது, அவரது செல்லிடப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
செல்லிடப்பேசியில் பேசிய நபர், ஏனாம் காந்தி கடற்கரைச் சாலையில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு சென்ற காவலர் மதுசூதன ராவ், மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.
அவரிடம் விசாரித்த போது, ஏனாம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாகவும், திங்கள்கிழமை காலைதான் சிகிச்சை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், உணவுக்கு வழியின்றி மூதாட்டி தவித்ததை அறிந்த அவர், உடனடியாக உணவை வாங்கி வந்து, அவருக்கு ஊட்டிவிட்டார்.
காவலரின் மனிதநேயம் மிக்க இந்த செயலை அறிந்த ஆளுநர் கிரண் பேடி, காவலர் கடலி மதுசூதன ராவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

