முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 26 கோடிப் பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர், மாநில அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், சமூகநலத் துறை, பிற்பட்டோர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் 16 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. நாடு முழுவதும் 33 கோடி பேர் ஜன்தன் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். அதேபோல, முத்ரா
வங்கிக் கடன் திட்டத்தில் புதுவையில் மட்டும் 36,000 பேர் பயன் பெற்றுள்ளனர். ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் எவ்விதப் பிணையும் இன்றி கடனாக வழங்கப்படுகிறது.
புதுவையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 26 கோடிப் பேர் முத்ரா கடன் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தலித்களுக்கு ரூ.3.30 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இது மோடி
அரசின் வரலாற்று சாதனை.
ஓபிசி பிரிவினருக்கு இப்போது 27 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள்தொகையில் ஓபிசி பிரிவினர் 37 சதவீதமாக இருப்பதால், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 37 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
மேலும், சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளில் தலித்துகளுக்கு தனியாக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது போல, ஓபிசி பிரிவினருக்கும் அரசியல் ரீதியான இட
ஒதுக்கீடு அவசியம் என்றார் ராம்தாஸ்
அதவாலே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவில்லை! பாஜக அறிக்கை

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
