ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரியில் மீன்வள மசோதாவைக் கண்டித்து மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவைக் கண்டித்து, மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
புதுச்சேரியில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர்.
Updated On :28 ஜனவரி 2024, 3:52 am

DIN

புதுச்சேரியில் மத்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவைக் கண்டித்து, மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மீனவர் சங்க கூட்டமைப்பினர், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கடல்சார் மீன்வள மசோதாவைக் கண்டித்து, புதுச்சேரி சோலை நகர் கடற்கரையில் இறங்கி மீனவர்கள் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்கள் படகுகளில் கறுப்புக் கொடி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி, கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் சங்க கூட்டமைப்பு தலைவர் சகாயராஜ் தலைமையில் திரண்ட மீனவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள புதிய கடல்சார் மீன்வள சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 

மீனவர்களுக்கான மானியம் குறைப்பு, மீன்பிடி எல்லைகளை குறுக்கி மீனவர்களின் மீன்பிடி தொழிலை நசுக்கும் வகையில் கொண்டு வர உள்ள இந்த மசோதாவால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், மத்திய பாஜக அரசு இச்சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். 
இதனை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சோலை நகர் போலீசார் அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.