எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுவை சட்டப்பேரவைக்குள் வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சட்டப்பேரவையில் நடக்கும் தடுப்பூசி முகாமை பேரவைத் தலைவர் ஆர் செல்வம் ஆய்வு செய்தார்
Updated On :22 டிசம்பர் 2021, 10:08 am

DIN

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீடுகள் தேடிச்சென்று விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சுகாதாரத்துறை சார்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் அங்கேயே தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசையும், பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, அங்கேயே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை சட்டப்பேரவை அலுவலகம் வாயில் பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அங்கேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் முகாம் அமைத்து, உள்ளே வருபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவைத் தலைவர் ஆர் செல்வம் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.