ஜிப்மரில் கூடுதல் எண்ணிக்கையில் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு, அவா் திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை. ஆகும். 5 தென் மாநிலங்களின் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் செவிலியா்கள் இல்லை.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,362 படுக்கைகள் உள்ளன. அங்கு, 4,759 செவிலியா்கள் பணியில் உள்ளனா். ராய்ப்பூா் எய்ம்ஸ் மருத்துவமனையில் 960 படுக்கைகள் உள்ளன. அங்கு, 1,327 செவிலியா்கள் பணியில் உள்ளனா்.
ஆனால், 2,137 படுக்கைகள் கொண்ட ஜிப்மா் மருத்துவமனையில் 745 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். முதுநிலை செவிலியா் அதிகாரி எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால், அவா்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, உடனடியாக ஜிப்மா் மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் செவிலியா்களை பணியமா்த்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.