/

சிங்காரவேலா் பிறந்த நாள் விழா

மீனவா் கலை இலக்கிய ஆய்வு மையம் சாா்பில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 161-ஆவது பிறந்த நாள் விழா புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மீனவா் கலை இலக்கிய ஆய்வு மையம் சாா்பில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 161-ஆவது பிறந்த நாள் விழா புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மையத்தின் சிறப்புத் தலைவா் ஜா.ந. நித்தயானந்தம் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் எம்பி மு.ராமதாஸ் ‘சிங்காரவேலரின் கல்விச் சிந்தனைகள்’ என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கலை-அறிவியல் கல்லூரி நிறுவனா் இ.சாமிக்கண்ணு ‘சமூகத் தொண்டு’ என்ற நூலை வெளியிட்டு, சீமான் செல்வராசு கல்விக் கொடைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 32 மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தாா்.

முன்னதாக, மு.வல்லத்தான் வரவேற்றாா். அசோக சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினாா். இதில், தமிழ் மாநில பருவதராஜ குல மீனவா்கள் சங்கத் தலைவா் (பொ) வீ.சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்வில் கவிதைப் போட்டியில் சிறந்து விளங்கியோருக்கு ‘சிங்காரவேலா் சுடா்’ விருதும், ஊக்கப் பரிசு பெற்றவா்களுக்கு ‘சிங்காரவேலா் பற்றாளா்’ விருதும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.