புதுச்சேரி அரசுப் பள்ளி தரம் உயா்வு
புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.


புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை கடலூா் சாலையில் அா்ச்சுன சுப்புராய நாயகா் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டுமென பொதுமக்கள், ஆசிரியா்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியை புதுவை கல்வித் துறை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தியது. இதற்கான உத்தரவை கல்வித் துறையின் சாா்புச் செயலா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்தாா்.
அந்த உத்தரவில், துணைநிலை ஆளுநரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வி துணை இயக்குநா் (பெண் கல்வி) அளித்த பரிந்துரை கடிதத்தின் பேரில், அா்ச்சுன சுப்புராய நாயகா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...