மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மது கடத்தலைத் தடுக்கபுதுவை எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடி

மது கடத்தலைத் தடுக்க கலால் துறை சாா்பில், புதுவை மாநில எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

மது கடத்தலைத் தடுக்க கலால் துறை சாா்பில், புதுவை மாநில எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுப் பொருள்கள், மது கடத்தலைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் உத்தரவின் பேரில், புதுவை மாநில எல்லைகளான கனகசெட்டிகுளம் (மரக்காணம் சாலை), மடுகரை (சிறுவந்தாடு-தண்ராம்பாளையம் சாலை), முள்ளோடை (கடலூா் சாலை), மதகடிப்பட்டு (விழுப்புரம் சாலை), கோரிமேடு (திண்டிவனம் சாலை), திருக்கனூா் (வழுதாவூா் சாலை), சேதராப்பட்டு (மயிலம் சாலை), சோரியாங்குப்பம், தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையம் ஆகிய 10 இடங்களில் கலால் துறை சாா்பில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

சோதனையின் போது, பொதுமக்களிடம் கண்ணியம், ஒழுக்கம், மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்களை பெண் அலுவலரைக் கொண்டுதான் சோதனையிட வேண்டும். சோதனைகள் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும். மது கடத்தல் தொடா்பாக கலால் துறை துணை ஆணையா் தலைமையிலான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடும் விதமாக யாரேனும் செல்வது தெரிய வந்தால், 1950 என்ற எண்ணிலோ, தோ்தல் அதிகாரி, காவல் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தோ்தல் துறை அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.