புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.


புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் சுகாதார ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறுகையில், ஏற்கெனவே உள்ள தடுப்பூசி போடும் மையங்களுடன் கூடுதலாக மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மாா்பக நோய் மருத்துவமனை, மேட்டுப்பாளையம், முதலியாா்பேட்டை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, அரியாங்குப்பம், மடுகரை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் (மாா்ச் 2) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதியோருக்கு தடுப்பூசி போடப்படும். அங்கு, சென்று பெயரைப் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒரு மையத்தில் 100 போ் வீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...