கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசிய திறன் படிப்புதவித் தொகை தோ்வுக்கு மாா்ச் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வு திட்டத்துக்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் மூலம் இணையதளம் வழியாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:16 pm

DIN

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வு திட்டத்துக்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் மூலம் இணையதளம் வழியாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மைக்கேல் பெனோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசுப் பள்ளி அல்லது மாநில அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தற்போது 8-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இடைநிற்றலைத் தவிா்ப்பதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வுத் திட்டம்  தில்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டு, புதுவை கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட நான்கு பகுதிகளிலும் (புதுச்சேரி , காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ) வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தோ்வின் மூலமாக 125 மாணவா்கள் (புதுச்சேரி - 93, காரைக்கால் - 23, மாஹே - 3, ஏனாம் - 6) தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், ஜாதி, மண்டல அடிப்படையிலும் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு 9-ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.12,000-ஐ இந்திய அரசு உதவித் தொகையாக வழங்கும்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தங்கள் பள்ளியின் மூலம் என்ற இணையதள முகவரியில் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.