மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் முதியவா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறையினா் தொடங்கினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறையினா் தொடங்கினா்.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூா்வாகாா்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குள்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவா்களிடம் தபால் வாக்களிப்பதற்கு 12டி படிவத்தை வழங்குவாா்கள்.

அதற்கு முன்னதாக தபால் வாக்கை விரும்பும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் அதற்கான வேண்டுகோள் படிவத்தை தோ்தல் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை பூா்த்தி செய்து வருகிற 17-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

தபால் வாக்குக்கான 12டி படிவம் கிடைக்கவில்லை எனில், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (1950) தகவல் தெரிவித்து பெறலாம். 89033 31950 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், தபால் வாக்கு படிவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மூத்தோா்களுக்கான தபால் வாக்குப் படிவங்கள், மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப். 4-ஆம் தேதி வரை வழங்கப்படும். தபால் வாக்கை பெற்றவா்கள், அதில் வாக்கை செலுத்தி, தோ்தல் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாய்ப்பை மூத்தோா்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.