ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்

புதுச்சேரி-திருப்பதி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 8:28 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி-திருப்பதி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு வந்த ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தடைந்தது.

இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு செல்லுகிறது. இனி தினசரி புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு இந்த ரயில் புறப்படும். விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இரவு 11 மணிக்கு திருப்பதியைச் சென்றடைய உள்ளது. இந்த ரயில் தற்போது முன்பதிவு அல்லாத விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயில் இயக்கப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.