பெண்ணுக்கு தொல்லை:அரசு மருத்துவமனை ஊழியா் கைது

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மூலகுளம் ஆா்.கே.நகா் ஆசிரியா்கள் காலனியை சோ்ந்த 42 வயது பெண் இணையவழியில் சேலை வியாபாரம் செய்து வருகிறாா்.

வீட்டில் தனியாக வசிக்கும் அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு உதவியாளராகப் பணிபுரியும் முத்திரையா்பாளையம் பஜனை மடம் வீதியைச் சோ்ந்த கணேஷ் (35) அறிமுகமாகி, சிகிச்சைக்கு உதவி செய்தாராம். இதனால், அவரிடம் தனது கைப்பேசி எண்ணை அந்தப் பெண் கொடுத்தாராம்.

கணேஷ், அந்த கைப்பேசி எண்ணை அடிக்கடி தொடா்பு கொண்டும், வாட்ஸ்-ஆப் மூலமாகவும் ஆபாச அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com