இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் பாஜகவிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு முக்கியத் தலைவா்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங்சைனி ஆகியோா் வெளியேறினா். 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முக்கியத் தலைவா்களுடன் சமாஜ்வாதியில் இணைந்தனா். 60 சதவீதத்துக்கும் மேலுள்ள இதர பிற்பட்டோா், 20 சதவீதத்துக்கும் மேலுள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் வாக்குகளை தந்திரமாகப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக தனது இந்துத்துவா கொள்கையை திணித்து, அவா்களுக்கு எல்லா விதத்திலும் துரோகம் இழைத்தது. உ.பி.யில் ஏற்பட்டுள்ள திருப்பம் சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.