காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்-டீசல் விற்பனை: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

Published On :1 பிப்ரவரி 2024, 2:54 pm IST

புதுச்சேரி: தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஏழைகள் நலத்திட்ட விழாவில், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: புதுவை மக்களுக்கு எந்த திட்டத்தின் பயன்களும் மறுக்கப்படாது. புதுச்சேரி சிறந்த(பெஸ்ட்) மாநிலமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி சொன்னார். பெஸ்ட் புதுச்சேரி, அதிவேக செயல்பாடுடன் (fast) புதுச்சேரியாக மாற வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களை விரைவாக சென்று சேர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பிதரமர் மோடி தனது ஆட்சியின் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதில் 3 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டு அதற்கு காரணம் கரோனா. சுவிசர்லாண்டில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் அதை சிறப்பாக பிரதமர் மோடி கையாண்டதாக, உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய மாடல் என்ற கரோனா தடுப்பூசி மாடல் வெற்றியை தந்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மத்திய அரசு. அரசு திட்டங்களில் காரைக்கால் ஒதுக்கப்படுகிறது என்ற செய்தி வருகிறது. அதனால், கடந்த வாரம் அங்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி, ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தி இருந்தேன்.

புதுவை பல புதுமைகளை கான உள்ளது, தென்னிந்தியாவிலேயே மிக குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தயங்கினாலும், புதுச்சேரி அரசு குறைத்து இருக்கிறது.

மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டுகிறது. இந்தியாவிலேயே புதுச்சேரி முதலாவதாக, ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் வந்துள்ளது. மேலும் பல திட்டங்கள் கிடைத்து, புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்றார் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.