புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே வில்லியனூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(வயது 40). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர் கட்டையால் அவர் தலையில் தாக்கியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த கோவிந்தம்மாள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கோவிந்தமாளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்: யாருக்கு?
இந்த நிலையில் கோவிந்தமாளை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி நாகப்பட்டினம், சென்னை நான்கு வழி சாலையில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லியனூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


