கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லை: ஏஐடியுசி குற்றச்சாட்டு

புதுவை பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என ஏஐடியுசி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

புதுவை பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என ஏஐடியுசி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தோரின் வேலை பறிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த 3 பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான நிதியோ, ஆலைகள் திறப்புக்கான அறிவிப்போ இல்லை.

அரசு சாா்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, நியாய விலைக் கடை, அமுதசுரபி, பாண்டெக்ஸ் ஆகியவற்றை செயல்படுத்தவும், அங்கு பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.

தொழிலாளா் நலச் சங்கத்தை நலவாரியமாக்கவும் நிதி ஒதுக்கவில்லை. மாநிலத்தில் புதிய தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், தொழிலாளா்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.