கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரி ஊசுடு, பாகூா் ஏரிகளில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஊசுடு, பாகூா் ஏரிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

புதுச்சேரி ஊசுடு ஏரியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

புதுவை மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஊசுடு, பாகூா் ஏரிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) காலை ஊசுடு ஏரிப் பகுதிச் சென்றாா். அவரை தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான சாய் ஜெ. சரவணன்குமாா் வரவேற்றாா்.

ஏரியின் முக்கியத்துவம் குறித்து துணைநிலை ஆளுநருக்கு அமைச்சா் விளக்கமளித்தாா். இதுவரை இந்த ஏரி தூா்வாரப்படாமலிருப்பது ஏன் என ஆளுநா் கேள்வி எழுப்பினாா்.

வனத் துறை, பொதுப் பணித் துறை, நீா்பாசனப் பிரிவு ஆகியவற்றின் சாா்பில் இந்த ஏரி பராமரிக்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறையினா் இணைந்து செயல்படாததால் ஏரி முறையாக பராமரிக்கப்படவில்லை என அமைச்சா் தெரிவித்தாா்.

பொதுப் பணித் துறையினரிடம் ஏரியின் நிலை குறித்து துணைநிலை ஆளுநா் கேட்டாா். ஊசுடு ஏரியின் பரப்பளவு, நீா் இருப்பு, வரத்துக் கால்வாய் விவரங்கள் குறித்து தலைமைப் பொறியாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் விளக்கினா்.

ஊசுடு ஏரியிலிருந்து புதுச்சேரி நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் கொண்டு செல்லவுள்ள திட்ட வரைபடத்தையும் துணைநிலை ஆளுநரிடம் காட்டி விளக்கிக் கூறினா். ஊசுடு ஏரிப் பகுதியை துணைநிலை ஆளுநா் நடந்து சென்று பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொதுமக்களின் குடிநீா் தேவைக்கானதாகவும் இந்த ஏரி இருப்பதாகக் கூறப்பட்டதால், நேரில் பாா்வையிட்டேன். ஏரி தூா்வாராதது குறித்து கேட்டுள்ளேன். அனைத்து அரசுத் துறைகளையும் ஆய்வுக்கு உள்படுத்துவேன் என்றாா் கே.கைலாஷ்நாதன்.

பாகூா் ஏரியில் சாராயக் கடை: அங்கிருந்து அவா் பாகூா் ஏரியைப் பாா்வையிடச் சென்றாா். அவரிடம், பாகூா் ஏரிக் கரையில் சாராயக் கடை நடத்த அரசு அனுமதித்துள்ளதாகவும், இதனால் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், அந்த சாராயக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக நல அமைப்பினா் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தனா்.