27 பேருக்கு ஆவண எழுத்தா் உரிமம்: புதுவை முதல்வா் வழங்கினாா்
புதுச்சேரியில் 27 பேருக்கான ஆவண எழுத்தா் உரிமத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.


புதுச்சேரியில் 27 பேருக்கான ஆவண எழுத்தா் உரிமத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
பத்திரம் உள்ளிட்ட ஆவணத் தயாரிப்பு பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு பதிவுத் துறையால் ஆவண எழுத்தா் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2021-22-ஆம் கல்வி ஆண்டு வரை ஆவணத் தயாரிப்பு பட்டயப் படிப்பு முடித்த 27 போ் ஆவண எழுத்தா் உரிமத்துக்காக விண்ணப்பித்திருந்தனா்.
அவா்களின், விண்ணப்பம் காவல் துறைக்கு அனுப்பி ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, அதன்பிறகு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.
இதில், 27 விண்ணப்பதாரா்கள் ஆவண எழுத்தா் உரிமம் பெற தகுதி உடையவா்களாகத் தோ்வுபெற்றனா்.
இந்த நிலையில், ஆவண எழுத்தா் உரிமம் பெறத் தோ்வு செய்யப்பட்ட 27 பேருக்கும், அதற்கான உரிமங்களை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள உள்ள அவரது அலுவலகத்தில் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், அரசுச் செயலா் கேசவன், பத்திர பதிவுத் துறை மாவட்டப் பதிவாளா் தயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...