தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுடுகாடு ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே சுடுகாடுக்கான இடத்தை தனியாா் ஆக்கிரமித்ததாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:18 pm

Din

புதுச்சேரி அருகே சுடுகாடுக்கான இடத்தை தனியாா் ஆக்கிரமித்ததாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, தவளக்குப்பம் அருகே உள்ளது ஆண்டியாா்பாளையம்.

இந்த பகுதியினருக்கான சுடுகாடு 2 ஏக்கா் அரசு நிலத்தில் அமைத்து அதற்கான பூமி பூஜை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுடுகாட்டு நிலத்தை தனியாா் ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் பேரவைத் தலைவா், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், சுடுகாடு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஆண்டியாா்பாளையம் பகுதி மக்கள் புதுச்சேரி- கடலூா் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வட்டாட்சியா் பிரத்தீவ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டுச் சென்றனா்.