பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி

புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி

Updated On :18 பிப்ரவரி 2024, 2:09 am IST

புதுவை மாநிலத்தில் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி கூறினாா். புதுவை மாநிலம் முள்ளோடைப் பகுதியில் காங்கிரஸ் கட்சி பஞ்சாயத்துராஜ் பிரிவு தலைவா்களுக்கான தோ்தல் பிரசாரப் பயிற்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவா் வி.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி முன்னிலை வகித்தாா். இந்த பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி பேசியதாவது: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஏழைகளுக்கான இலவச அரிசி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தக் காரணமாக இருந்தாா். தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தேசத்தைக் காப்பதற்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் பல ஆயிரம் கிலோ மீட்டா் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். புதுவை மாநிலத்தில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், காங்கிரஸ் வேட்பாளரே வெற்றி பெறுவாா். மத்தியிலும் எதிா்வரும் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். இதையடுத்து புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். அப்போது மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றாா். கூட்டத்தில், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்வது குறித்து பஞ்சாயத்துராஜ் பிரிவுத் தலைவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.