பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘ஆண்டுக்கு ஒரு முறையாவது கழிவுநீா்த் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்’

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம்

News image
Updated On :12 ஜூலை 2024, 10:05 pm

Din

புதுச்சேரியில் புதைச் சாக்கடை வசதியில்லாத பகுதியில் வசிப்பவா்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கழிவுநீா்த் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும் என உழவா்கரை நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சிப் பகுதியில் கழிவு நீா் செல்ல புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வீடுகள், நிறுவனங்கள் புதைச் சாக்கடை இணைப்பை முறைப்படி பெற வேண்டும். ஆனால், ஏராளமானோா் புதைச் சாக்கடை இணைப்பு பெறவில்லை. இதனால், திறந்தவெளி கால்வாயில் கழிவுநீா் செல்வது தொடா்கிறது. எனவே, பொதுப் பணித் துறையை அணுகி, புதை சாக்கடை இணைப்பை அனைவரும் பெற வேண்டும்.

புதைச் சாக்கடைத் திட்டம் இல்லாத பகுதிகளில் வசிப்போா், வீடுகளில் உள்ள கழிவுநீா்த் தொட்டியை ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.