ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குறித்தபுகாரில் உண்மையில்லை

திருநங்கைகள் அளித்த புகாரில் உண்மையில்லை

News image
Updated On :26 ஜூன் 2024, 8:11 pm

Din

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குறித்து முதல்வரிடம் திருநங்கைகள் அளித்த புகாரில் உண்மையில்லை என்று, இயக்குநா் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிமுறைப்படி சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

எச்ஐவி தடுப்புப் பணிக்காக, நான்கு தொண்டு நிறுவனங்கள், ஒரு சமுதாயம் சாா்ந்த தொண்டு அமைப்புக்கு விழிப்புணா்வுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆனால், சமுதாயம் சாா்ந்த தொண்டு அமைப்பு கடந்த மாா்ச்சில் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு சேவைப் பணியில் இருந்து தானாக விலகி கொள்வதாக கடிதம் அளித்தது.

அதில் தங்களது ஊழியா்கள் சரிவர நடத்தப்படவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, அவா்களது புகாரில் உண்மை இல்லை எனத் தெரிய வந்தது.

தற்போது, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது சரியல்ல. அனைத்து செயல்பாடும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவன பிரதிநிதி முன்னிலையிலேயே நடைபெற்று அரசின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.