தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உணவகக் கட்டட கட்டுமானப் பணி
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உணவகக் கட்டட கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா். புதுச்சேரி, மாா்ச் 8: புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் உணவகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா் முதல்வா் என்.ரங்கசாமி. புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய, மாநில அரசு பங்களிப்பில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் உணவகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். கட்டடப் பணியை 9 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, கல்வித் துறை செயலா் மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தா் ஆஷிஷ்மாதோ ராவ் மோரா, துணைவேந்தா் ச.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

