குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
அமைச்சா் என்.திருமுருகன் பதவி பிரமாண நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் புதிய அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கான துறைகள் குறித்து முதல்வா் முடிவெடுப்பாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது. அதன் செயல்பாடு மத்திய அரசு சம்பந்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டமானது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் வகையில் இல்லை. இந்தச் சட்டம் எல்லா நாடுகளிலும் உள்ளது. நாட்டில் சட்டரீதியாகவே அனைவரும் தங்கமுடியும். அதையே மத்திய உள்துறை அமைச்சா் தெளிவாகக் கூறியுள்ளாா். எனவே, குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் மீட்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழிசை சௌந்தரராஜன் சொத்து விவர முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


