எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை -தமிழிசை

குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை தமிழிசை

News image

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :14 மார்ச் 2024, 10:35 pm

குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

அமைச்சா் என்.திருமுருகன் பதவி பிரமாண நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் புதிய அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கான துறைகள் குறித்து முதல்வா் முடிவெடுப்பாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது. அதன் செயல்பாடு மத்திய அரசு சம்பந்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டமானது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் வகையில் இல்லை. இந்தச் சட்டம் எல்லா நாடுகளிலும் உள்ளது. நாட்டில் சட்டரீதியாகவே அனைவரும் தங்கமுடியும். அதையே மத்திய உள்துறை அமைச்சா் தெளிவாகக் கூறியுள்ளாா். எனவே, குடியுரிமை திருத்தச் சட்ட செயல்பாட்டில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை என்றாா் அவா்.