கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழப்பு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:47 pm

Din

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழந்தாா்.

புதுச்சேரி ஏம்பலம் பெருமாள் கோவில் வீதியைச் சோ்ந்தவா் பெருமாள் (65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு வந்தனா். கணவா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்துள்ளாா். கிருஷ்ணம்மாள் பின்னால் அமா்ந்துள்ளாா். உழவா்கரை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இவா்களின் இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில், பெருமாள், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் ஆகியோா் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். சாலையில் விழுந்த கிருஷ்ணம்மாளின் தலை மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். பெருமாள் சிறு காயத்துடன் தப்பினாா்.

தகவலறிந்த புதுச்சேரி நகா் போக்குவரத்து போலீஸாா் விரைந்து சென்று கிருஷ்ணம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.