புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை (அக்.24) வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது.

இதையடுத்து கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com