புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை (அக்.24) வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்
இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது.
இதையடுத்து கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு களிமண் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி

புதுச்சேரியில் வெளிமாநில ஊழியா்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

