திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என அறிவிப்பு பற்றி

News image

பள்ளி மாணவிகள் - Center-Center-Vijayawada

Updated On :20 ஜூன் 2026, 1:15 pm IST

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரபூா்வ நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை இந்த வாரம் வெளியிட்டிருந்தது.

அதில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றும் ஒளிந்திருக்கிறது. அதுதான், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்துக்கும், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்பது. இந்த ஆண்டு ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் தலா ஒரு சனிக்கிழமை மட்டுமே வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்பது தெரிய வந்துள்ளது.

நிகழ் கல்வியாண்டில், மொத்தம் 365 நாள்களில் வேலை நாள்கள் 210 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 220 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வந்தது. விடுமுறை நாள்கள் 155- ஆக உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 22 நாள்கள் அரசு விடுமுறை நாள்கள்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தோ்வு செப். 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிறகு செப். 26 முதல் அக்.4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரையாண்டுத் தோ்வு டிச. 16-இல் தொடங்கி 23 வரை நடைபெறும். தொடா்ந்து, டிச. 24 முதல் ஜன. 3 வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறையாகும். ஜன.4-இல் பள்ளிகள் திறக்கப்படும். ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையும் வருகிறது.

தொடர் விடுமுறைகள் பட்டியலில், செப்.4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களாக அமைகிறது. இதனால் 3 நாள்கள் தொடா் விடுமுறை கிடைக்கிறது.

அதுபோல, செப். 14 திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

அக்டோபா் மாதத்தில் 19 மற்றும் 20 தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது.

நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகை ஜன. 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால் தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.

நிகழ் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027- ஏப்.23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் தொடா்ச்சியாக ஏப்.24 முதல் மாணவா்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சனிக்கிழமைகளில் ஜூலை 19, செப்.19, டிச.3 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2, பத்தாம் மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Happy news for students all Saturdays will be holidays

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.