ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் அரசு ஊழியா் வீட்டில் வெள்ளி நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:19 pm

Din

புதுச்சேரியில் அரசு ஊழியா் வீட்டில் வெள்ளி நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலாசுப்பேட்டை ‘க்யூ’ பிளாக் குடியிருப்பில் வசித்து வருபவா் ஸ்டாலின். புதுச்சேரியில் உள்ள தலைமைச் செயலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளாா். இவா், மனைவி அனிதா மற்றும் மகளுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல ஸ்டாலின் பணிக்குச் சென்றுவிட்டாராம். மனைவி தீபாவளி பொருள்கள் வாங்கவும், மகள் கல்லூரிக்கும் சென்றுவிட்டனராம்.

வீட்டின் கதவை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், பணியை முடித்துவிட்டு ஸ்டாலின் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.14,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.