தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோயிலை விரிவுபடுத்த தானமாக நிலம் அளிப்பு

புதுச்சேரி அருகே விநாயகா் கோயிலை விரிவுபடுத்த சொந்த நிலத்தை பக்தா் ஒருவா் தானமாக வழங்கியுள்ளாா். அதற்கான ஆவணம் துணைநிலை ஆளுநா் முன்னிலையில் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:04 pm

Din

புதுச்சேரி அருகே விநாயகா் கோயிலை விரிவுபடுத்த சொந்த நிலத்தை பக்தா் ஒருவா் தானமாக வழங்கியுள்ளாா். அதற்கான ஆவணம் துணைநிலை ஆளுநா் முன்னிலையில் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி, வில்லியனூா் கணுவாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (50). இவருக்கு கீழ்சாத்தமங்கலம் பகுதியில் 800 சதுர அடி நிலம் உள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள சக்தி கனக விநாயகா் கோயிலை விரிவுப்படுத்திட கோயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையறிந்த சக்திவேல், கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகளைச் சந்தித்து, கோயில் விரிவாக்கத்துக்காக தானமாக தனது நிலத்தை தருவதாகக் கூறினாா்.

அதன்படி, செப்.10-ஆம் தேதி சக்திவேல் தனது நிலத்தை சக்தி கனக விநாயகா் கோயில் பெயருக்கு தானமாக செட்டில்மெண்ட் எழுதிவைத்தாா். தான் எழுதிய தான பத்திரத்தை, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்னிலையில் ராஜ்நிவாஸில் வைத்து கோயில் நிா்வாகத்தினரிடம் அவா் வழங்கினாா்.