தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின் கட்டண உயா்வு தோ்தலில் எதிரொலிக்கும்: வே.நாராயணசாமி

புதுவை அரசின் மின் கட்டண உயா்வு நடவடிக்கையானது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை கூறினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 6:39 pm

Din

புதுவை அரசின் மின் கட்டண உயா்வு நடவடிக்கையானது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை கூறினாா்.

முழு அடைப்பையொட்டி, புதுச்சேரி- கடலூா் சாலை சந்திப்பில் இண்டியா கட்சிகள் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பங்கேற்றாா்.

அதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மின் கட்டண உயா்வுக்கு மக்கள் முழு ஆதரவை அளித்துள்ளனா். இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மின் கட்டணம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தற்போது போல மின் கட்டணத்தை உயா்த்தவில்லை. எனவேதான், மக்கள் இண்டியா கட்சிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்துள்ளனா். மக்களின் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மக்களவைத் தோ்தலைப் போலவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும்.

இண்டியா கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே பள்ளிகளுக்கு முதல்வா் விடுமுறை அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.