புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திறப்பு
புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான டித்வா புயலால் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்தது. புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.
6 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கியது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை கருமேகக் கூட்டங்கள் விலகி, வானம் வெளிச்சத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து 2 நாள்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். வழக்கம்போல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.
புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை அழகை கண்டுகளித்து, தற்படம் மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

