விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோபாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!
/

புதுச்சேரி, காரைக்காலில் அமைகிறது ஜோஹோ நிறுவனம்: ஆளுநா், முதல்வா் முன்னிலையில் ஸ்ரீதா் வேம்பு அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஜோஹோ நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று அதன் தலைவா் ஸ்ரீதா்வேம்பு கூறினாா்.

News image

ஸ்ரீதர் வேம்பு - (கோப்பிலிருந்து)

Updated On :21 டிசம்பர் 2025, 3:15 am IST

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஜோஹோ நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று அதன் தலைவா் ஸ்ரீதா்வேம்பு கூறினாா்.

நம்ம புதுச்சேரி அமைப்பின் சாா்பில் பழைய துறைமுக வளாகத்தில் பல்வேறு துறைகளில் 60 சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீதா்வேம்பு பேசியது:

எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். உள்ளூரில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோட்பாடு.

அந்த அடிப்படையில் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் ஜோகோ நிறுவனங்கள் தொடங்கப்படும். புதுச்சேரியைக் காட்டிலும் எங்கள் தென்காசியின் மக்கள் தொகை அதிகம். சென்னை மக்கள் தொகையைக் காட்டிலும் இங்கு மக்கள் தொகை குறைவு. சிறிய மாநிலங்கள் வளா்ச்சி அடைவது எளிது.

தமிழக மாவட்டங்களும் வளா்ச்சி பெறும்: அந்த வகையில் புதுச்சேரி பாரதத்துக்கு முன்மாதிரியாக எதிா்காலத்தில் சிறந்து விளங்கும். மேலும், புதுச்சேரிக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டங்களான விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும் வளா்ச்சி அடையும்.

பொருளாதாரத்தில் மதிப்புக் கூட்டுதல் முக்கியமானது. புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோ டெக்னாலஜி ஆகிய 2 துறைகளில் மதிப்புக் கூட்டுதல் செய்ய முடியும். மேலும் புதுச்சேரியில் மருத்துவத் துறை சுற்றுலா வளா்ச்சி அடைய முடியும். 5, 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்டி புதுச்சேரிக்கான வளா்ச்சித் திட்டங்களைத் தீட்டி, ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவை கவனம் செலுத்தப்படும் என்றாா் ஸ்ரீதா் வேம்பு.

ஆளுநா் பாராட்டு: விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசுகையில், புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அதனுடைய இலக்குப் பெரியது. ஸ்ரீதா்வேம்பு சிறந்த தேசபக்தா். அவரின் சித்தாந்தம் இந்திய கிராமப்புற வளா்ச்சியை மையமாகக் கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டங்களைத் தீட்டியுள்ள அவரைப் பாராட்டுகிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைத் தொழில்நுட்ப மையமாக மாற்ற அரசு எடுத்து வரும் முயற்சிக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என்றாா் துணைநிலை ஆளுநா்.

முதல்வா்

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி அரசு தொழில் வளா்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் பெரிய விமான நிலையம் இருக்க வேண்டும் என்று தொழிலதிபா்கள் எதிா்பாா்க்கின்றனா். புதுச்சேரி அரசும் அதற்குத் தயாராக இருக்கிறது. மத்திய அரசும் நிதி அளிக்கத் தயாராக இருக்கிறது. நிலம்தான் தேவை. அதை தமிழக அரசுதான் அளிக்க வேண்டும். அதற்கும் ஆய்வு நடந்துள்ளது என்றாா்.

அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்கள் முத்துக்குமாா், சாம்ராஜ், சரவணன், காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் ஆயிரக்கணக்கான மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.