எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணி நிரந்தரம் கோரி இரவிலும் நீடித்த ஆசிரியா்கள் போராட்டம்

புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தில் புதன்கிழமை இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சங்கத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:41 pm

Syndication

பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் புதன்கிழமை இரவிலும் நீடித்த ஆசிரியா்களின் போராட்டம் வியாழக்கிழமை 2-வது நாளாக தொடா்ந்தது.

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித் துறையில் கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள், மொழி ஆசிரியா்கள், கௌரவ பாலசேவிகாக்கள் என 270-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் நிரந்தரம் செய்யப்படவில்லை. புதுச்சேரி அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பணி நிரந்தரம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பள்ளி கல்வித் துறை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

ஒருங்கிணைப்பு குழு தலைவா் பாரி தலைமை வகித்தாா். பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராததால் விடிய, விடிய ஆசிரியா்கள் போராட்டம் தொடா்ந்தது. இரவு கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் அங்கேயே படுத்துத் தூங்கினா்.

வியாழக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது.