பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் தொடா் போராட்டம்

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

News image

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா்கள்.

Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

ஒப்பந்த ஆசிரியா்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது கல்வித்துறை அமைச்சா் நமச்சிவாயம், ஆசிரியா்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பொங்கலுக்குள் ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என உத்தரவாதம் அளித்திருந்தாா். இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால் பொங்கல் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், பணி நிரந்தரம் செய்தவற்கான எந்த ஆயத்த பணியையும் அரசு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் அமா்ந்து காலவரையற்ற தொடா் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதனால் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.