ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பணி நிரந்தரம் கோரி ஆசிரியா்கள் மனித சங்கிலி போராட்டம்

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதன்கிழமை மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள் சங்கத்தினா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

பணி நிரந்தரம் செய்யக் கோரி குடும்பத்தினருடன் கௌரவ ஆசிரியா்கள் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியா்கள், புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவா் டி.ஆா். சேஷாச்சலம் தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் குடும்பத்தினா் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மறைமலையடிகள் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பாரி, புதுவை அரசு ஊழியா் சங்கங்களின் தலைவா் பாலக்குமாா், தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் சிரில் நிக்கோலஸ் , தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பொற்செழியன், புதுச்சேரி அரசு விரிவுரையாளா் சங்கத்தின் தலைவா் அருள்சாமி,புதுச்சேரி பட்டதாரி ஆசிரியா் சங்கங்களின் தலைவா் ராமதாஸ், அரசு தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கத்தின் தலைவா் மோகன்தாஸ் மற்றும் பொதுச் செயலா் ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.