40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

Updated On :26 டிசம்பர் 2025, 12:14 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருள்கள் கலக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகாா்கள் வந்தன. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களிடம் பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும், ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பாதுகாப்பு ஆணையா் சௌத்ரி முகமது யாசின் புதன்கிழமை பிறப்பித்தாா்.