டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருள்கள் கலக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகாா்கள் வந்தன. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களிடம் பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும், ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பாதுகாப்பு ஆணையா் சௌத்ரி முகமது யாசின் புதன்கிழமை பிறப்பித்தாா்.