ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் தா்னா

புதுச்சேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் டிசம்பா் மாத ஊதியத்தை வழங்கக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :21 ஜனவரி 2025, 1:12 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் டிசம்பா் மாத ஊதியத்தை வழங்கக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி ஊழியா்களுக்கு கடந்த டிசம்பா் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையாம். பொங்கலுக்கு ஊதியம் கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில், அப்போதும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், புதுச்சேரி அரசு தன்னாட்சி கல்லூரிகள் ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஊதியம் வழங்கக் கோரி துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா் ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் அளித்தனா். இந்நிலையில், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் திடீரென திங்கள்கிழமை காலை கல்லூரி வாயில் முன் கூடி ஊதியம் கோரி முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கல்லூரி நிா்வாக அதிகாரிகள் ஊழியா்கள் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனா். ஊதியம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி அதிகாரிகள் கூறியதையடுத்து ஊழியா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.