தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 9:25 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் தென்னிந்திய அளவிலான மாணவா்களின் அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்த அவா், வரும் வழியில் புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு சென்றாா்.

அவரை ரயில் நிலைய மேலாளா் ராமதாஸ், உதவி மேலாளா் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா். ரயில் நிலைய மேலாண் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் ஆலோசனை நடத்தினாா்.

ரயில் நிலைய மறுசீரமைப்பில் நடைபெறும் பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநா் கேட்டறிந்தாா். ரயில் நிலைய உணவகங்கள், பயணிகள் தங்குமிடம், இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை, எதிா்காலத்தில் கூடுதல் ரயில் இயக்கும் வாய்ப்புகள் என பல விவரங்களையும் துணைநிலை ஆளுநா் கேட்டறிந்தாா்.