தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரியில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

News image

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளிடம் வழங்கிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :22 ஜனவரி 2025, 8:22 pm

Din

புதுச்சேரியில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பிலான விவசாயப் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். நிவாரணத் தொகைக்கு நிதித் துறை ஒப்புதல் அளித்ததையடுத்து, 12,955 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.24.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கெனவே ஏனாம் பிராந்திய விவசாயிகள் 199 பேருக்கு ரூ.24.60 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், காரைக்கால் பிராந்தியத்தில் 5,020 விவசாயிகளுக்கு ரூ.11.64 கோடி வழங்கப்பட்டது. புதுச்சேரியில் 7,736 விவசாயிகளுக்கு ரூ.12.22 கோடி நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி நிவாரணத் தொகைக்கான காசோலையை விவசாயிகளிடம் வழங்கினாா்.

வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், காலாப்பட்டு எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.