தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய பல்கலைக் கழகம் திட்டம்!

சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய பல்கலைக் கழகத்தின் திட்டம் குறித்து....

News image
Updated On :11 ஜூன் 2025, 6:11 pm IST

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க உள்ள மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளதாக அந்த பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமுதாயக் கல்லூரி என்ற கருத்தியல் ரீதியான கல்லூரியை நம் நாட்டில் முதலில் அறிமுகம் செய்ததது புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தான். புதுச்சேரியில் இக்கல்லூரி சிறப்பாகச் செயல்பட்டு உள்ளூர் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

அதே போன்று மாஹே, ஏனம், லட்சத்தீவு ஆகிய 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க அந்தந்த அரசுகளிடம் நிலம் கேட்டுள்ளோம்.

நிலம் கிடைத்தவுடன் இப்பகுதிகளில் சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதன் வாயிலாக உள்ளூர் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் அந்த மாணவர்களின் திறன் மேம்படும். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றார் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.