பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை மேம்படுத்தும்: மத்திய சட்டத் துறை அமைச்சா்

Updated On :14 மார்ச் 2025, 2:53 am IST

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால் கூறினாா்.

புதுச்சேரியில் பத்மஸ்ரீ விருதாளா் தவிலிசைக் கலைஞா் பி.தட்சிணாமூா்த்திக்கு வியாழக்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், தவிலிசைக் கலைஞா் பி.தட்சிணாமூா்த்திக்கு பரிசையும், பாராட்டு மடலையும் வழங்கினாா்.

முன்னதாக, அவா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்துப் பேசினாா். பின்னா், புதுவை மாநில பாஜக அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையானது அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மாநிலத் தாய் மொழிகளிலும் கற்பதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஹிந்தி போன்ற குறிப்பிட்ட மொழியை மாநிலங்களில் திணிப்பதாகக் கூறுவது சரியல்ல என்றாா்.

நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், எம்.சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.