தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவைக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து நம்பிக்கையுடன் வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :12 மே 2025, 8:17 pm

Din

புதுச்சேரி: புதுவையின் மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து நம்பிக்கையுடன் வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சென்டாக் சாா்பில் நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் இளநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டல் கையேடு திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 10,577 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

புதுவைக்கு வந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவிவை சந்தித்த போது, மத்திய அரசு நிதி உள்பட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இதை தொடா்ந்து வலியுறுத்துவோம்.

மாநில அந்தஸ்து தொடா்பான தீா்மானக் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா் என்.ரங்கசாமி.