தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் செய்ய பணி ஆணை

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:30 pm

Syndication

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி ஆணையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஸ்தபதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் ரங்கசாமி பணி ஆணையை ஸ்தபதி வரதராஜனிடம் வழங்கினாா்.

அப்போது சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, தலைமைப் பொறியாளா் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா் செல்வராசு, தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா், தோ்த் திருப்பணி குழுவினா், கோயில் நிா்வாக அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.